ரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு!

 

ரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு!

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை நல்லி நிறுவனர் குப்புசாமி நேரில் சந்தித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அதேபோல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார்.

ரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு!

அத்துடன் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தற்போது துரிதப்படுத்தியுள்ளார். நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோருடன் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு!

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது வேறேதும் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கிறதா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.