வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றுங்கள்! நளினியின் தாயார் சிறைத்துறைக்கு கடிதம்

 

வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றுங்கள்! நளினியின் தாயார் சிறைத்துறைக்கு கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில் நளினியை பேசவும், பார்க்கவும் அனுமதிக்கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார். இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் ஒருவர் தலையிட்டதால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது.

வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றுங்கள்! நளினியின் தாயார் சிறைத்துறைக்கு கடிதம்

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மகள் நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறை துறை டிஜிபிக்கு நளினியின் தாயார் பத்மா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “வேலூர் பெண்கள் தனிச்றையில் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தனது மகள் நளினிக்கு சிறை துறை அதிகாரிகள் தொடர்ந்து பல மாதங்களாக தொந்தரவு செய்தும் மனதளவில் துன்புருத்தியும் வருகின்றனர். இதனால் இன்று கூட எனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியது. வேலூர் சிறையில் இருந்தால் எனது மகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். எனவே மனிதாபிமானத்தோடு எனது மகள் நளினியை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து புழல் பெண்கள் சிறைக்க மாற்ற வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.