பெண்களை வைத்து நிர்வாண பூஜை… எச்சரித்த போலீஸ்… உயிரை மாய்த்த சாமியார்

 

பெண்களை வைத்து நிர்வாண பூஜை… எச்சரித்த போலீஸ்… உயிரை மாய்த்த சாமியார்

வீட்டின் அருகில் குழியைத் தோண்ட பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்த சாமியாரை காவல்துறையினர் எச்சரித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல் காட்டை சேர்ந்த சாமியார் சரவணன்- சாந்தி தம்பதிக்கு மகனும், மகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சாமியார் சரவணன் திடீரென்று மாயமானார். மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் தேடியும் சாமியார் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், வீட்டின் அருகே உள்ள ஒரு திட்டில் உடல் அழுகிய நிலையில் சாமியார் சரவணனின் உடல் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்ககிரி காவல்துறையினர் , உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அமாவாசை அன்று தன்னை தேடி வருபவர்களுக்கு தாயத்து கட்டுவதும், மந்திரகயிறு கட்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் சாமியார் சரவணன். அத்தோடு பேய்களையும் ஓட்டுவதாகவும் கூறிவந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், தனது வீட்டின் அருகே குழி தோண்டி, பெண்களை நிர்வாணப்படுத்தி சாமியார் பூஜை செய்ததாக தேவூர் காவல்துறையினர் ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தேவூர் உதவி காவல்துறை ஆய்வாளர் ஒருவர், சாமியாரை எச்சரித்துள்ளார்.

இதனிடையே, சாமியார் இறப்பதற்கு முன் பேசி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் பேசிய சாமியார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் என்பவர் தன்னை தாக்கினார் என்றும் தன் ஆன்மா அவரை சும்மா விடாது எனவும், காவல்துறையினர் தாக்கியதால்தான், நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையிலேயே காவல்துறையினர் தாக்கியதில் சாமியார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.