பாத்ரூம் போன பெண் -ஜன்னலோரம் நின்ற ஆண் -லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த கொடுமை

 

பாத்ரூம் போன பெண் -ஜன்னலோரம் நின்ற ஆண் -லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த கொடுமை

ஒரு லேடீஸ் ஹாஸ்டெல் விடுதியில் ஒரு பெண் பாத்ரூம் போக வந்த போது ,ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்றதால் கைது செய்யப்பட்டார் .

பாத்ரூம் போன பெண் -ஜன்னலோரம் நின்ற ஆண் -லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த கொடுமை

கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தின் லிங்சுகூர் நகரத்தைச் சேர்ந்த24 வயதான பவன் பெங்களூருவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் .அந்த பெங்களூருவில் அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகே பல மாணவிகள் மற்றும் பெண்கள் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருக்கும் விடுதி ஒன்று உள்ளது .அந்த விடுதியின்  பாத்ரூம், அந்த வாலிபர் பவனின் ரூமிற்கு அருகேயுள்ளது .

இதனால் அந்த பவன் அடிக்கடி அந்த விடுதியில் தங்கியிருக்கும்  பெண்கள் வரும் பாத்ரூம் அருகே நிர்வாணமாக நிற்பார் .அதனால் பல பெண்கள் அந்த பாத்ரூம் பக்கம் வரவே அச்சப்படுவார்கள் .

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையன்று அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஒரு பெண் நள்ளிரவு நேரத்தில் அங்கு பாத்ரூம் போக வந்தார் .அப்போது அந்த பவன் அந்த ஜன்னலோரம் துணியில்லாமல் நிர்வாணமாக நின்றுள்ளார் .அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே தன்னுடைய தாயாருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினார் .உடனே அவரின் தாயார் இதை அந்த விடுதியின் உரிமையாளருக்கு போன் செய்து கூறினார் .

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த விடுதி உரிமையாளர் உடனே அங்குள்ள  காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் சொன்னார் .உடனே  காவல் துறையினர்  அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த பவனை கைது செய்தனர் .பிறகு பவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தார்கள் .

பாத்ரூம் போன பெண் -ஜன்னலோரம் நின்ற ஆண் -லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த கொடுமை