“லேசான கொரோனா அறிகுறி தெரிகிறது, கந்த சஷ்டி கவசத்தோடு கிளம்புகிறேன்”… நயினார் நாகேந்திரன் பரபரப்புத் தகவல்!

 

“லேசான கொரோனா அறிகுறி தெரிகிறது, கந்த சஷ்டி கவசத்தோடு கிளம்புகிறேன்”… நயினார் நாகேந்திரன் பரபரப்புத் தகவல்!

முன்னாள் அமைச்சரும் பாஜக அரசியல் பிரமுகருமான நயினார் நாகேந்திரன், தனக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“லேசான கொரோனா அறிகுறி தெரிகிறது, கந்த சஷ்டி கவசத்தோடு கிளம்புகிறேன்”… நயினார் நாகேந்திரன் பரபரப்புத் தகவல்!
சாமானிய மக்களிடம் தன் கைவரிசையைக் காட்டி கொண்டிருந்த கொரோனா தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என முக்கியமானவர்களையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகிவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியது. தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

“லேசான கொரோனா அறிகுறி தெரிகிறது, கந்த சஷ்டி கவசத்தோடு கிளம்புகிறேன்”… நயினார் நாகேந்திரன் பரபரப்புத் தகவல்!
தற்போது பாஜக அரசியல் பிரமுகர் நயினார் நாகேந்திரன் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை!!” என்று தெரிவித்துள்ளார்.