சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்கர் தேசிய அளவில் 7 ஆம் இடம்!

 

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்கர் தேசிய அளவில் 7 ஆம் இடம்!

கடந்த ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்கர் தேசிய அளவில் 7 ஆம் இடம்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 829 பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில் நாகர்கோவிலை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும், தமிழக அளவில் பாஸ்கர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.