கொரோனா விதிமீறல்… நாகர்கோவிலில் பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு!

 

கொரோனா விதிமீறல்… நாகர்கோவிலில் பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு!

கன்னயாகுமரி

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட்டிற்கு, மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காய்கறி வாங்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, வடசேரி பேருந்து நிலையத்தில் நேற்று முதல் தற்காலிக சந்தை செயல்பட தொடங்கியது. அங்கு, பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கொரோனா விதிமீறல்… நாகர்கோவிலில் பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு சீல் வைப்பு!

இந்த நிலையில், மாநகராட்சிக்குட்பட்ட வாத்தியார்விளை பகுதியில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகளவில் கூடுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில், நேற்று மாநகராட்சி நல அலுவலர் கிங்சால் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தபட்ட சூப்பர் மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், அதிகளவில் கூடியது தெரியவந்தது. இதனையடுத்து, கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், சூப்பர் மார்க்கெட்டை பூட்டி சீல்வைத்தனர்.