நாகர்கோயில் சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்ட காசி

 

நாகர்கோயில் சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்ட காசி

கன்னியாகுமரி

பெண்களை ஏமாற்றி பண மோடியில் ஈடுபட்ட காசி, நாகர்கோயில் சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (27). இவர் பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் நெருங்கி பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் நேசமணி நகர், நாகர்கோயில் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து காசியை கைதுசெய்த போலீசார், ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

நாகர்கோயில் சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்ட காசி

இந்நிலையில், கொரோனா காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவிலுக்கு காசி மாற்றப்பட்டார். அப்போது, காசியிடம் பணம் பெற்றுகொண்டு அவருக்கு தேவையான பொருள்களை சிறைக் காவலர்கள் வழங்கி வந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, காசி இன்று மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறைத்துறை அதிகாரிகள், நாகர்கோவில் மாவட்ட சிறையில் காசி கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்ததாகவும், கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அவர் மீண்டும் தற்போது பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.