கோடியக்கரைக்கு படகில் வந்த இலங்கையை சேர்ந்த மூவர் கைது

 

கோடியக்கரைக்கு படகில் வந்த இலங்கையை சேர்ந்த மூவர் கைது

நாகப்பட்டினம்

இலங்கையில் இருந்து நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு நள்ளிரவில் முறைகேடாக படகில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை, வேதாரண்யம் கடலோர காவல்படையினர் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திரிகோணமலையை சேர்ந்த முகமது அன்சாரி(45), அவரது மனைவி சல்மா பேகம்(35) மற்றும் அவர்களது மகன் அன்சார்(10) என்பது தெரியவந்தது. மேலும், இலங்கையில் இருந்து மூவரையும் மர்மநபர்கள் கோடியக்கரை சவுக்கு பிளாட் அருகே இறக்கிச்சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.