லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எஸ்.எஸ்.ஐ மகன்

 

லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எஸ்.எஸ்.ஐ மகன்

நாகப்பட்டினம்

நாகையில் நெல் மூட்டை ஏற்றிச்சென்ற லாரியை கடத்தி, தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் மகனை பிடித்து போலீசார்
விசாரித்து வருகின்றனர். நாகை முதலாவது கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான எடை போடும் இயந்திரம் உள்ளது. நெல் கொள்முதல்
நிலையங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி வரப்படும் நெல் மூட்டைகள், இங்கு எடை சரிபார்த்தபின் ரயில் வேகங்களில் ஏற்றி அனுப்புவது வழக்கம்.

லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எஸ்.எஸ்.ஐ மகன்


இநநிலையில், எடை போடுவதற்கு காலதாமதம் ஆவதால் லாரிகளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுனர்கள் காத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்மநபர் ஒருவர், ஒரு லாரியில் ஏறி அந்த லாரியை எடுத்துக்கொண்டு தாறுமாறாக ஓட்டினார். இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய எஸ்.எஸ்.ஐ மகன்

இதைப்பார்த்த லாரி ஓட்டுனர், காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, தப்பிசெல்ல முயன்றவரை பிடித்து சென்றனர். விசாரணையில், விபத்து ஏற்படுத்திய நபர் வலிவலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரின் மகன் தமிழ்வேந்தன் என்பது தெரியவந்தது. நெல் மூட்டைகளுடன் அவர் லாரியை கடத்த முயன்றாரா? உள்ளிட்ட விபத்துக்கான காரணம் குறித்து நாகை நகர போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.