நாகப்பட்டினம்- தடை காலத்திற்குள் அதிவேக என்ஜின்களை அகற்ற 3 மாவட்ட மீனவர்கள் முடிவு

 

நாகப்பட்டினம்- தடை காலத்திற்குள் அதிவேக என்ஜின்களை அகற்ற 3 மாவட்ட மீனவர்கள் முடிவு

நாகப்பட்டினம்

மீன்பிடி தடை காலத்திற்குள், தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை அகற்றிக்கொள்ள வேண்டுமென நாகை, காரைக்கால் உள்ளிட்ட 3 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் மீன்வளம் அழிந்துபோவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அதிவேக என்ஜின்களை

நாகப்பட்டினம்- தடை காலத்திற்குள் அதிவேக என்ஜின்களை அகற்ற 3 மாவட்ட மீனவர்கள் முடிவு

பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டுமென மீன் வளத்துறையினர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று நாகை மீன்பிடி துறைமுகத்தில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காரைக்கால், கிளிஞ்சல்மேடு, தரங்கம்பாடி, பழையார்

நாகப்பட்டினம்- தடை காலத்திற்குள் அதிவேக என்ஜின்களை அகற்ற 3 மாவட்ட மீனவர்கள் முடிவு

உள்ளிட்ட 54 கிராம மீனவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் மீன்பிடி தடை காலத்திற்குள், தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை 3 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதனை விசைப்படகு உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அரசு அறிவித்துள்ள என்ஜின்களை பொருத்தி, சிறு தொழிலுக்கு பாதிப்பு இல்லாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.