நாகை- “தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு
Oct 22, 2020, 11:57 IST1603348072000
நாகை
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஒருபுறமும், ஆளுநர் ஆட்சி மறுபுறமும் என்று இரட்டை ஆட்சி நடைபெறுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம்
கீழையூரில் கட்சியின் புதிய அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஆளுநர் சுதந்திரமாக செயல்படவில்லை என்றும், மத்திய அரசின் முகவராக தான் செயல்படுகிறார் என்றும் கூறிய முத்தரசன், தமிழக
சட்டசபையில் எந்த தீர்மானத்தை நிறைவேற்றினாலும் அதை மத்திய அரசு நிறைவேற்றுவது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது, அதன் பிரதிநிதியாக ஆளுநர் தமிழகத்தில் ஆட்சி செய்கிறார் என்றும் முத்தரசன் தெரிவித்தார்.