தலைமை தீயணைப்பு நிலையத்தில் ஆயுதபூஜை உற்சாக கொண்டாட்டம்
Oct 25, 2020, 17:50 IST1603628427000
நாகை
நாகப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், ஆயுதபூஜை விழா உற்சாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாகப்பட்டினம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகள் மாவிழை தோரணம் மற்றும் வாழைக்கன்றுகளால்
அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், தீயணைப்புக்கு தேவையான கருவிகள் சரஸ்வதி தேவி புகைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை
அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை அவர்கள், ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.