கழுத்தறுபட்ட நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

 

கழுத்தறுபட்ட நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

நாகை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கழுத்தறுபட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேளாங்கண்ணி முச்சந்தி அருகே நேற்று 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழுத்தில் ரத்தக்காயங்களுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், அந்த

கழுத்தறுபட்ட நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

இளைஞரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அதில்,

கழுத்தறுபட்ட நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

காயமடைந்தவர், திருத்துறைபூண்டி கரைதெருவை சேர்ந்த மகேந்திரன் (20) என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மகேந்திரன், திடீரென மாயமான நிலையில் ரத்தக் காயங்களுடன் வேளாங்கண்ணியில் மீட்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ள முயன்றாரா? அல்லது யாரேனும் கொல்ல முயற்சித்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.