13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

 

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

நாகை

நாகை அருகே ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர் நாகை அருகே கங்களாஞ்சேரி பூண்டி ரெயில்வே கேட் கீழத்தெருவை சேர்ந்த தனபால் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (27).

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கட்டிட தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், உடல் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பெற்றோர், இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

அப்போது, ஆசை வார்த்தை கூறி தமிழ்ச்செல்வன் தன்னிடம் பலமுறை உல்லாசமாக இருந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை கைது
செய்தனர்.