நாகை- 1000 மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் ரயிலில் மதுரைக்கு அனுப்பிவைப்பு

 

நாகை- 1000 மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் ரயிலில் மதுரைக்கு அனுப்பிவைப்பு

நாகை

நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கும் பணிகள் தற்போது

நாகை- 1000 மெட்ரிக்டன் நெல் மூட்டைகள் ரயிலில் மதுரைக்கு அனுப்பிவைப்பு

நடைபெற்று வருகிறது. அதன்படி அருந்தவன்புலம், சன்னமங்கலம், கொத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் மெட்ரிக்டன் சம்பா சி.ஆர்.1009 நெல் ரகத்தை 21 ரயில் பெட்டிகளில் ஏற்றி மதுரை மாவட்டம் கூடல்நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.