30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!

 

30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!

ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் நாகாலாந்துக்கு இறைச்சிக்காக கடத்தப்படும் நிலையில் அங்கு நாய்க்கறி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!நாகாலாந்து பழங்குடியின மக்கள் ஆடு, மாடு இறைச்சியைப் போல நாய்க்கறியையும் விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்து நாகாலாந்துக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான நாய்கள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக கொலை செய்யப்படுவதாக விலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். எனவே, நாய்க் கறி விற்கவும் உண்ணவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!

இதைத் தொடர்ந்து நாகாலாந்து அரசு நாய்கறி விற்பனை செய்ய, நாய் கறியால் யார் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய தடை விதிப்பது என்று முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அம்மாநிலத் தலைமைச் செயலாளர் டெம்ஜென் டாய் வெளியிட்ட ட்வீட் பதிவில் தெரிவித்திருந்தார்.

http://


நாகாலாந்து மக்களின் உணவு விஷயத்தில் அரசு முடிவு செய்வது தவறு என்று சிலர் நாகா மக்களுக்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன. இருப்பினும் அரசின் முடிவை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிசோரம் மாநிலத்தில் நாய் இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து நாயை அது நீக்கியது. அதைத் தொடர்ந்து நாகாலாந்து அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.