மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

 

மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

நாகை

நாகையில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் புதிய நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்(18). இவர் நேற்று

மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து சாந்தகுமாரை அவரது வீட்டார் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார், நாகை

மீனவர் மர்மமான முறையில் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை

சிவசக்தி நகரில் உள்ள செயல்படாத தனியார் பள்ளி கட்டிடத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அங்கு சென்ற வெளிப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.