‘நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை’: நண்பனே திட்டமிட்டு போட்டுத் தள்ளிய கொடூரம்!

 

‘நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை’: நண்பனே திட்டமிட்டு போட்டுத் தள்ளிய கொடூரம்!

சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் செல்லதுரை. இவருக்கு 2 மனைவிகள் இருக்கின்றனர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்த இவர், சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்ததாக தெரிகிறது. செல்லதுரை மீது கொலை, ரேஷன் அரிசி கடத்தல் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அடிதடி வழக்கு ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.

‘நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை’: நண்பனே திட்டமிட்டு போட்டுத் தள்ளிய கொடூரம்!

அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த செல்லதுரை, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு செல்லதுரை தனது வழக்கறிஞரை பார்க்க காரில் சென்றிருக்கிறார். அப்போது, அவரை பின் தொடர்ந்த 2 கும்பல், முன்னும் பின்னுமாக அவர்களது காரை செல்லதுரை காரின் மீது மோதி நிறுத்தியுள்ளனர். பதற்றம் அடைந்த செல்லதுரை, காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றுள்ளார். அவரை பின் தொடர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.

‘நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை’: நண்பனே திட்டமிட்டு போட்டுத் தள்ளிய கொடூரம்!

இதில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், செல்லதுரைக்கும் ஜான் என்பவருக்கும் அரிசி கடத்தலில் தகராறு ஏற்பட்டதாகவும் அதற்கு பழி வாங்க ஜான் ஒரு கும்பலை ஏற்பாடு செய்து செல்லதுரையை தீர்த்து கட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பல வழக்குகளில் சிக்கியிருந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.