‘சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால்…’ நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை

 

‘சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால்…’ நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை

சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால் நாங்கள் புலி கொடி ஏந்தி திரையினை தீயிட்டு கொழுத்துவோம் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அவர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது சென்னை புரசைவாக்கதில் நடைபெற்றது. முன்னதாக வீரப்பனின் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

‘சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால்…’ நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை

தமிழக தண்ணீர் பிரச்சனை, நீட் தேர்வு விவகாரம் போன்றவற்றில் அவர் குரல் கொடுத்தபோது அவருக்கு துணையாக நின்றதாகவும் ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், சிங்கள கொடி அணிந்து விஜய் சேதுபதி திரையில் தோன்றினால் நாங்கள் புலி கொடி ஏந்தி திரையினை தீயிட்டு கொழுத்துவோம் எனவும் எச்சரித்தனர். ஒருவேளை 800 திரைப்படம் இணையதளத்தில் வெளிவந்தால் விஜய் சேதுபதியை தமிழகத்தை விட்டு அப்புறப்படுத்தும் வேலைகளை தொடங்குவோம் எனவும் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.