“அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்; ஆளும் ஆட்சியாளர்களின் அநீதி” சீமான் இரங்கல்!

 

“அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்; ஆளும் ஆட்சியாளர்களின் அநீதி” சீமான் இரங்கல்!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு நாம் தமிழ் கட்சி சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து பொதுநல வழக்குகள் மூலம் சட்டப்போராட்டம் நடத்தி வந்த இவர், கடந்த மாதம் முதல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்; ஆளும் ஆட்சியாளர்களின் அநீதி” சீமான் இரங்கல்!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ” அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள். ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

ஐயாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். சமூகத்தின் மீதான தனிமனிதரின் பொறுப்புணர்வு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதற்கான நிலைத்த அளவுகோலாகவே ஐயா டிராபிக் ராமசாமி அவர்களின் செயல்பாடுகள் திகழ்ந்து அவரது புகழை என்றைக்கும் பறைசாற்றும் என்பது திண்ணம். ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.