தஞ்சை காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்!

 

தஞ்சை காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்!

தஞ்சை

தஞ்சையில் திருட்டு வழக்கு விசாரணக்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் மர்மமன முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தாண்டவன்குளம் பகுதியை சேர்ந்த வனஜா மகன் சத்தியவாணன் (35). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தஞ்சை மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவாஜி நகரில் சாமிநாதன் என்பவரது வீட்டில் ரூ.5 லட்சம் பணம், 6 பவுன் நகைகள் திருடிய வழக்கில் சத்தியவாணன், சென்னையை சேர்ந்த அப்துல் அஜீஸ் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.

தஞ்சை காவல் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்!

தொடர்ந்து, அவர்களை தஞ்சை மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் சத்தியவாணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் அவரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சத்யவாணனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., ரவளி பிரியா, தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.