தேன்கனிகோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்… கணவரிடம் தீவிர விசாரணை!

 

தேன்கனிகோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்… கணவரிடம் தீவிர விசாரணை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுமுச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் மாரே கவுடா. விவசாயி. இவருக்கும், பாரதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண்கள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாரதிக்கு, அதே பகுதியை சேர்ந்த கிரிஷ் என்ற இளைஞருடன் பழக்கம ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

தேன்கனிகோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்… கணவரிடம் தீவிர விசாரணை!

இந்த விவகாரம் கணவர் மாரே கவுடாவுக்கு தெரிய வந்ததால், அவர் பாரதியை கண்டித்து உள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்,நேற்று பாரதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள், அவரை கணவர் வீட்டினர் அடித்துக்கொன்று, தூக்கில் தொங்க விட்டதாக கூறி தேன்கனிகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கணவர் மாரேகவுடா மற்றும் அவரது பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.