துணிக்கடை ஊழியர் மர்ம மரணம்- உரிமையாளர் வீட்டின் முன் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

 

துணிக்கடை ஊழியர் மர்ம மரணம்- உரிமையாளர் வீட்டின் முன் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் துணிக்கடை ஊழியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, கடை உரிமையாளரின் வீட்டு வாசலில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் அடுத்த குஸ்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடேசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசன், அதேபகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள துணிக்கடைக்கு கடந்த மாதம் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு போதிய உணவு அளிக்காமல் தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியதால் வெங்கடேசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டும் அவர்கள் அனுப்பாததால், அங்கிருந்து தப்பி நேற்று வீட்டிற்கு வந்தடைந்தார்.

துணிக்கடை ஊழியர் மர்ம மரணம்- உரிமையாளர் வீட்டின் முன் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

தொடர்ந்து பணிக்கு சென்ற இடத்தில் தனக்கு உணவு வழங்காமல் அடித்து துன்புறுத்தியாதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசனின் மனைவி மற்றும் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி வேலைக்கு அழைத்துச்சென்ற புருஷோத்தமனின் வீட்டின் வாசலில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, வெங்கடேசனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.