உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

 

உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் பெருந்தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் கலையழகி(26). இவர் முதுகலை பட்டதாரி. இவரது தாய் தமிழ்செல்வி இன்று காலை, இவரை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்றிருக்கிறார். வீடு திரும்பிப் பார்க்கையில் கலையழகி படுகாயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறார்.

உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். கலையழகியின் சடலத்தை கண்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக உணர்ந்த அப்பகுதி மக்கள், உடனாடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த திருவெண்காடு போலீசார், கலையழகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் தமிழ்செல்வி காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்த போலீசார் கலையழகியின் நண்பர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் கலையழகியின் மரணம் குறித்த உண்மை தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.