“நாட்டாமை இந்த மிக்சர் திங்கிற புருஷன் எனக்கு வேணாம்” -சண்டையே போடாத கணவனுக்கு நேர்ந்த கதியை பாருங்க.

 

“நாட்டாமை இந்த மிக்சர் திங்கிற புருஷன் எனக்கு வேணாம்” -சண்டையே போடாத கணவனுக்கு நேர்ந்த கதியை பாருங்க.

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஷரியா என்ற ஊரில் தன்னுடைய கணவனுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணிடம் சண்டையே போடுவதில்லையாம் .அவர் என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மையாக இருந்துள்ளர் .அவரின் மனைவி ஏதாவது தப்பு செய்தால் கூட உடனே மன்னித்து விடுவாராம் .எதற்கும் எதிர்த்தே பேசுவதில்லையாம் .இதனால் அந்த பெண் கடந்த 18 மாதமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி ,அங்குள்ள ஷரியா கோர்ட்டில் விவகாரத்து கோரி மனு செய்தார் .

“நாட்டாமை இந்த மிக்சர் திங்கிற புருஷன் எனக்கு வேணாம்” -சண்டையே போடாத கணவனுக்கு நேர்ந்த கதியை பாருங்க.


அந்த மனுவில் அந்த பெண் தன்னுடைய விவகாரத்துக்கான காரணத்தை குறிப்பிட்டதை பார்த்து நீதிபதி அதிர்ந்து போனார் .அதில் தன்னுடைய கணவன் என்ன சொன்னாலும் ,திட்டினாலும் சண்டையே போடுவதில்லை ,கத்தவில்லை இதனால் அவரோடு என்னால் வாழமுடியாது .இதனால் அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் அந்த நீதிபதி இந்த காரணத்துக்காக விவாகரத்து தர முடியாது என்று அவரின் மனுவை நிராகரித்தார் .பிறகு அந்த பெண் உள்ளூர் பஞ்சாயத்துக்கு இந்த விவாகரத்து விவகாரத்தை கொண்டு சென்றார் .பஞ்சாயத்து நாட்டாமைகளும் அந்த பெண் சொல்லும் காரணத்தினை கேட்டு மயங்கி விழாத குறையாக அந்த கணவன் மனைவியை விசாரித்து வருகிறார்கள் .ஆனால் நாட்டாமை இன்னும் தீர்ப்பை அறிவிக்காமல் இருக்கிறார் .

“நாட்டாமை இந்த மிக்சர் திங்கிற புருஷன் எனக்கு வேணாம்” -சண்டையே போடாத கணவனுக்கு நேர்ந்த கதியை பாருங்க.