நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

 

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று பலத்த எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

இதில் நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்; கொரோனா தொற்று காரணமாக எழுத முடியாதவர்களுக்கு அனுதாபம். மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மேல் உள்ள அக்கறை மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.