முத்தூட் பைனான்ஸ் கொள்ளை : வெளியானது சிசிடிவி காட்சிகள்!

 

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை : வெளியானது சிசிடிவி காட்சிகள்!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25,091 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை : வெளியானது சிசிடிவி காட்சிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல, அந்நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது ஊழியர்களை போலவே உடையணிந்து கொண்டு பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், வங்கியின் கதவு திறக்கப்பட்ட உடன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும் ரூ.96 ஆயிரம் பணத்தையும் அங்கிருந்து சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை : வெளியானது சிசிடிவி காட்சிகள்!

அதிர்ச்சி அடைந்த முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்ததில் பெரிய பைகளில் கொள்ளையர்கள் நகையைக் கொண்டு சென்றது தெரிய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதனடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்த போலீசார், கொள்ளையர்கள் பெங்களூருக்கு சென்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.