கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி!
Apr 19, 2021, 04:40 IST1618787400000
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன்,சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்து மாபெரும் சாதனை படைத்தவர். இவர் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை, பெங்களூரு அணிகள் சார்பாக விளையாடியுள்ளார். நேற்று முத்தையா முரளிதரன், 48ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.