ஹெச். ராஜா கட்டுப்படுத்த முடியாத சக்தி வாய்ந்தவரா?

 

ஹெச். ராஜா கட்டுப்படுத்த முடியாத சக்தி வாய்ந்தவரா?

சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் செய்யும் ஹெச். ராஜாவை கட்டுப்படுத்துக
என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, அமைச்சர் பழனிவேல் தியாகராசன் ஆகியோருக்கு எதிராக ஹெச்.ராஜா கடந்த சில நாட்களாக அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார். இதன் காரணமாக சென்னை டிஜிபி அலுவகத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹெச். ராஜா கட்டுப்படுத்த முடியாத சக்தி வாய்ந்தவரா?

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச். ராஜா பிறரை ஆத்திரமூட்டி வம்புக்கு இழக்கும் மலிவான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அறிவுத்துறை உலகம் போற்றி பாராட்டி வரும் பெரியார் ஈ.வெ.ரா.வை இழிவாக பேசியதில் தொடங்கி, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனன் , பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. ஜவாஹிருல்லா என பலர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

ஹெச். ராஜா கட்டுப்படுத்த முடியாத சக்தி வாய்ந்தவரா?

சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வன்ம செயலில் திட்டமிட்டு ஈடுபட்டு வரும் ஹெச். ராஜா சட்டத்திற்கு மேலானவரா? எல்லையற்ற அதிகாரம் கொண்டவரா? கட்டுப்படுத்த முடியாத சக்தி வாய்ந்தவரா? என்ற வினாக்கள் எழுகின்றன. எனவே, சட்டங்களை அத்துமீறி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் எச். ராஜா மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவரை கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.