விவசாயிகளின் முதுகில் முதலமைச்சர் குத்திவிட்டார்- முத்தரசன்

 

விவசாயிகளின் முதுகில் முதலமைச்சர் குத்திவிட்டார்- முத்தரசன்

திமுக தலைமையிலான எங்களது கூட்டணி தொடரும் என்றும், எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் முத்தரசன், “இந்தியாவில் உள்ள 70 சதவீத விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம். தனியார் மற்றும் கார்பரேட் முதலாளிகளை லாபம் அடைய செய்ய இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பொய் கூறி வருகிறார். மத்திய அரசு தீங்கான சட்டங்கள் கொண்டு வந்தாலும் அனைத்தையும் கண்மூடி தனமாக ஆதரிப்பது தமிழக முதல்வரின் வேலையாக உள்ளது. இந்தியாவிலேயே மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி நமது முதல்வர் எடப்பாடி மட்டுமே.

விவசாயிகளின் முதுகில் முதலமைச்சர் குத்திவிட்டார்- முத்தரசன்

வேளாண் சட்டத்தால் வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் ஆதரவிலை கிடைக்காது, விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் விற்று பணமாக்கவே விவசாயிகள் பார்ப்பார்கள் பெரும் வியாபாரிகள் மட்டுமே இருப்பு வைத்து கள்ள மார்கெட்டில் விற்பனை செய்யமுடியும். தமிழக முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்தால், அதிமுக 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும், எதிராக வாக்களித்ததால் விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகிகளாக மாறினர்” எனக் கூறினார்.