“ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்” : முதல்வர் பழனிசாமி

 

“ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்” :  முதல்வர் பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தர மாட்டார் னென்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்” :  முதல்வர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அம்மையார் குப்பம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு ஸ்டாலினை சந்திக்க வந்த வேத விற்பணர்கள், ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தனர். வெள்ளி வேலை கையில் வைத்தபடி மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்” :  முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் கோவையில் 2வது நாளாக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை – புலியகுளம் பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி , “மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரம் கோவை, பெண்களுக்கு அரணாக அதிமுக அரசு உள்ளது. திமுகவிடம் இருந்து பெண்களை பாதுகாப்பதுதான் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது . ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்; அதிமுகவுக்கு தான் வரம் கொடுக்க போகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் தர மாட்டார் ” என்றார்.