ஈரோட்டில் பெரியார் சிலை மீது காவி பூச முயன்ற முருகப் பக்தர்! வைரலாகும் வீடியோ!
’கருப்பர் கூட்டம்’ எனும் யூடியூப் சேனல் கந்தசஷ்டி கவசம் பாடல்களின் அர்த்தத்தைக் கூறுவதாக ஒரு வீடியோ தயாரித்து, வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் உள்ள பல பகுதிகள் முருகப் பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக பாரதிய ஜனதா கட்சியினர் காவல் துறையில் புகார் அளித்தனர். கருப்பர் கூட்டம் சேனல் நடத்துபவர்களின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
கருப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் புதுச்சேரியிலும் கைது செய்யப்பட்டனர். கருப்பர் கூட்டம் சேனல் அலுவலகத்தை காவல் துறை பூட்டி சீல் வைத்தது. ஆயினும் இந்தப் பிரச்னை தீர்ந்த பாடில்லை.
கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசினார் ஒருவர். தமிழகத்தின் ஓரிரு கட்சிகள் தவிர மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். கோவை, போத்தனூர் அருண் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இன்று, ஈரோட்டில் உள்ள பெரியார் சிலை மீது வயது முதிர்ந்த முருகப் பக்தர் ஒருவர் காவிச் சாயம் பூச முயன்றிருக்கிறார். ஆனால், அவரைப் பார்த்துவிட்ட காவல் துறையினர் ஓடி வந்து, சிலை மீது சாயம் பூச விடாமல் தடுத்துவிடுகின்றனர். இந்த சம்பவங்களை ஒருவர் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
A Hindu outfit functionary attempts to vandalise #Periyar statue in Erode ,Police thwart the attempt.
The Hindu outfit functionary ran towards the Periyar statue and allegedly tried to pour saffron paint over it. Police personnel om duty over powered him and have detained him. pic.twitter.com/wO0bdYA3wU
— Mugilan Chandrakumar (@Mugilan__C) July 20, 2020