வரதட்சணை கேட்டு இளம்பெண் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை… கணவர், மாமியார் வெறிச்செயல்!

 

வரதட்சணை கேட்டு இளம்பெண் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை… கணவர், மாமியார் வெறிச்செயல்!

தஞ்சாவூர்

தஞ்சை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கணவர் மற்றும் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகன் அய்யப்பன். கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மட்டங்காளை பகுதியை சேர்ந்த கவுசல்யா உடன் திருமணம் நடைபெற்றுது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், திருமணமான சில ஆண்டுகளிலேயே அய்யப்பன் கூடுதல் வரதட்சணை கேட்டு கவுசல்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கவுசல்யா, குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வரதட்சணை கேட்டு இளம்பெண் தூக்கில் தொங்கவிட்டு படுகொலை… கணவர், மாமியார் வெறிச்செயல்!

இந்த நிலையில், கடந்த ஆடிப் பெருக்கு அன்று சேர்ந்து வாழ்வதற்காக கவுசல்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து, அவரிடம் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய அய்யப்பன், நேற்று முன்தினம் தாயார் சரோஜாவுடன் சேர்ந்து வீட்டின் உத்திரத்தில் கவுசல்யாவை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர், வீட்டை பூட்டிவிட்டு இருவரும் தப்பியோடினர்.

கவுசல்யா தூக்கில் தொங்கியதை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றார்.