ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிக்கொலை

 

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிக்கொலை

ஈரோடு

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ரேகா (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், ரேகா ஈரோடு ஏபிடி ரோடு பகுதியில் தனது பெற்றோரின் வீட்டிற்கு, நேற்று குழந்தைகளுடன் வந்தார். தொடர்ந்து, இன்று காலை அவர் தனது தாயார் தமிழரசி உடன் உறவினர் வீட்டு கிரகப் பிரவேசத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.

பின்னர், தமிழரசி குழந்தைகளுடன் வெளியே சென்றதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், ரேகாவின் வீடு எங்கு உள்ளது? என அந்த பகுதியினரிடம் விசாரித்து வந்துள்ளார். பின்னர் ரேகாவின் வீட்டிற்குள் சென்ற அந்த நபர், சிறிதுநேரத்தில் ரத்தக்கறையுடன் வெளியேறி உள்ளார்.

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் வெட்டிக்கொலை

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ரேகாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அவர் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், ஈரோடு மாவட்ட எஸ்.பி தங்கதுரை, ஏடிஎஸ்பி பொன் கார்த்திக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வீரப்பன் சத்திரம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கொலையாளியை தேடி வருகின்றனர்