கெத்துக்காக பக்கத்து வீட்டுக்காரரை குத்திக்கொலை செய்த இளைஞர் கைது!

 

கெத்துக்காக பக்கத்து வீட்டுக்காரரை குத்திக்கொலை செய்த இளைஞர் கைது!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம். இவர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்திருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த தேவி என்பவருக்கும் இடையே கால்வாயில் கழிவுநீர் விடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக்கொண்டே இருந்துள்ளது. இவர்களுக்கிடையே வந்த சண்டை முற்றிய நிலையில், வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தேவியின் மகன் குறளரசன் தனது நண்பர்களை அழைத்து வந்து செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

கெத்துக்காக பக்கத்து வீட்டுக்காரரை குத்திக்கொலை செய்த இளைஞர் கைது!

அதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் வேளச்சேரியில் பதுங்கி இருந்த குறளரசன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே அவர்கள் மீது கொலை வழக்கு இருப்பதும் ஒரு கெத்துக்காக அவரை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.