கழுத்தை நெரித்து …தண்ணீர் தொட்டியில் அமுக்கி ..-.பக்கத்து வீட்டு சண்டையில் சிறுவனை கொன்ற கொடூரமான பெண் ..

 

கழுத்தை நெரித்து …தண்ணீர் தொட்டியில் அமுக்கி ..-.பக்கத்து வீட்டு சண்டையில் சிறுவனை கொன்ற கொடூரமான பெண் ..

பக்கத்து வீட்டு சண்டையில் மும்பையில் ஒரு பெண் நாலு வயது சிறுவனை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

மும்பை அந்தேரியில் உள்ள சந்தோஷி மாதா நகரில் மதுகாதே என்ற 39 வயது பெண் வசித்து வந்தார். அவருக்கும் பக்கத்து வீட்டிற்கும் அடிக்கடி சண்டை வருமாம் . இதனால் அவர்களுக்கிடையே பகை நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது.கடந்த திங்கள்கிழமையன்று இரவு மதுகாதே தன் பக்கத்து வீட்டு நாலு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்தார் .பிறகு வீட்டிற்கு வந்த சிறுவனை தன்னுடைய லெக்கிங்ஸ் உடையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் .பிறகு சிறுவனின் பிணத்தை வீட்டின் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கடித்துவிட்டார்.

கழுத்தை நெரித்து …தண்ணீர் தொட்டியில் அமுக்கி ..-.பக்கத்து வீட்டு சண்டையில் சிறுவனை கொன்ற கொடூரமான பெண் ..
மறுநாள் வரை தன்னுடைய நான்கு வயது சிறுவனை காணாத அவனின் தாயார் அந்த பகுதி முழுவதும் தேடிபார்த்துள்ளார் .எங்கும் சிறுவனை காணாததால் சந்தேகப்பட்டு அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கொண்டு மதுகாதே வீட்டிற்குள் நுழைந்து தேடியபோது அவர் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சிறுவனின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர் .பிறகு மது மீது சிறுவனின் தாயார் போலீசில் புகார் தந்தார் .போலீசார் விரைந்து வந்து மதுக்காதே வினை கொலை வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .