ஆன்லைனில் மளிகைப் பொருள் ஆர்டர் செய்த ஆசிரியையிடம் லட்சம் ரூபாய் ஆட்டயைப்போட்ட மோசடி கும்பல்!

 

ஆன்லைனில் மளிகைப் பொருள் ஆர்டர் செய்த ஆசிரியையிடம் லட்சம் ரூபாய் ஆட்டயைப்போட்ட மோசடி கும்பல்!

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியில் செல்வதற்குக் கூட அஞ்சி வருகின்றனர். இதனால் அனைவரும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதே சமயம் இதைப் பயன்படுத்தி மக்களிடம் கொள்ளையடிக்கவும் சில கும்பல் கிளம்பியுள்ளனர்.

மும்பையில் 33 வயதான ஆசிரியை ஒருவர் ஆன்லைனில் .1.02 லட்சம் ஏமாந்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். சீமா சேத் என்ற பெண் ஆன்லைனில் ரூ .1716 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அந்த ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். ஆர்டர் செய்த பணத்தை திரும்ப அளிக்குமாறு கோரிக்கை தெரியவித்துள்ளார். அவரது பணம் திரும்ப அளிக்கப்படும் என்று ஆன்லைன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மளிகைப் பொருள் ஆர்டர் செய்த ஆசிரியையிடம் லட்சம் ரூபாய் ஆட்டயைப்போட்ட மோசடி கும்பல்!

சில நாட்கள் ஆகியும் பணம் திரும்பக் கிடைக்காததால் அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை இணையத்தில் எடுத்து தொடர்பு கொண்டுள்ளார். நிசர்க் புயலால் பணம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கஸ்டமர் கேர் நபர் தெரிவித்துள்ளார். பின்னர் சில வெப் லிங்குகளை அனுப்பி அதில் உள்ள சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யுமாறு கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் அந்த சாப்ட்வேர்ரை இன்ஸ்டால் செய்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்துள்ளார். பின்னர் தான் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் ரூபாய் காணாமல் போனதுதெரிய வந்துள்ளது. பின்னர் 23000 ரூபாய் திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர் அந்தப் பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.