“சோறு போட்ட பாட்டியை கூறு போட்ட பேரன் ” -போதைக்கு அடிமையான பேரனின் வெறி செயல்

 

“சோறு போட்ட பாட்டியை கூறு போட்ட பேரன் ” -போதைக்கு அடிமையான பேரனின் வெறி செயல்

போதை பழக்கத்துக்கு அடிமையான ஒரு பேரன் தன்னுடைய பாட்டியை வெட்டி கூறு போட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“சோறு போட்ட பாட்டியை கூறு போட்ட பேரன் ” -போதைக்கு அடிமையான பேரனின் வெறி செயல்

மும்பையை சேர்ந்த ஒரு தம்பதியரின் 25 வயது மகன் கிறிஸ்டோபர் டயஸ் போதைக்கு அடிமையாகி இருந்தார் .அதனால் அவரை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க அவரின் பெற்றோர்கள் அவரை போதை மறுவாழவு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்து விட்டு,அவர்கள் இஸ்ரேலுக்கு சென்று விட்டார்கள் .பிறகு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த கிறிஸ்டோபர் டயஸ் அவரின் பாட்டியோடு வசித்து வந்துள்ளார் .ஆனால் அவர் கடந்த திங்கள் கிழமையன்று மீண்டும் போதை எடுக்க ஆரம்பித்துள்ளார் .இதனால் அவரின் பாட்டி ரோஸி அவரை திட்டியும் ,பிறகு அவரோடு பேசாமலும் அவரை புறக்கணித்தும் வந்துள்ளார் .


இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவரின் பேரன் தன்னுடைய 80 வயது பாட்டி ரோஸியை அன்று நள்ளிரவு அவர் அறையில் தூங்கும்போது அவரை துண்டு துண்டாக வெட்டி அவரின் பாகங்களை அந்த அறை முழுவதும் வீசியுள்ளார் .பிறகு ரத்தக்குளத்தில் கிடந்த அந்த பாட்டியை தான் கொன்று விடடதாக அவரின் தந்தைக்கு போன் செய்து கூறியுள்ளார் .கோவாவுக்கு டூர் வந்துள்ள அவரின் தந்தை உடனே வீட்டிற்கு விரைந்து வந்து அங்கு இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார் .
இந்த கொலை பற்றி போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் பேரன் கிறிஸ்டோபர் டயசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

“சோறு போட்ட பாட்டியை கூறு போட்ட பேரன் ” -போதைக்கு அடிமையான பேரனின் வெறி செயல்