“ஏன்டா பொம்பளைன்னா பொத்திக்கிட்டு போவான்னு நெனெச்சியா” -நடுரோட்டில் ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு பெண்ணால் நேர்ந்த நிலை

 

“ஏன்டா பொம்பளைன்னா பொத்திக்கிட்டு போவான்னு நெனெச்சியா” -நடுரோட்டில் ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு பெண்ணால் நேர்ந்த நிலை

ஓர் போக்குவரத்து மிக்க சாலையில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டி ஒரு ஆட்டோவில் மோதியதால் ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் அந்த ஆட்டோ ஓட்டுனரை ஆயுதத்தால் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது .


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விராரில் மஞ்சீதி கவுர்-போசலே என்ற 50 வயதான பெண் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் தன்னுடைய ஸ்கூட்டியில் சவாரி செய்து கொண்டிருந்தார் .அப்போது துர்கேஷ் பாட்டீல் என்பவரின் ஆட்டோ மீது அந்த பெண்ணின் ஸ்கூட்டி மோதிவிட்டது ..உடனே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் அந்த நடுரோட்டிலேயே நடந்தது .இதனால் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் .அதனால் கோபமுற்ற அந்த பெண் உடனே அந்த ஆட்டோ ட்ரைவரை பார்த்து ‘ஏண்டா பொம்பளைன்னா பொத்திகிட்டு போவான்னு நினைச்சியா’ என்று கோபமாக திட்டியபடி தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு ஆயுதத்தை எடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனரை வயிற்றில் குத்தினார் .
இதனால் அவர் நடுரோட்டிலேயே வலி பொறுக்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் கத்திக்கொண்டிருந்தார் .இந்த காட்சியை அங்கிருந்த பொது மக்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களின் போனில் பதிவு செய்து அதை ஊடகத்தில் வெளியிட்டனர் .உடனே அங்கிருந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .அங்கு இருவரும் வழக்கு பதிவு செய்தனர் .மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்

“ஏன்டா பொம்பளைன்னா பொத்திக்கிட்டு போவான்னு நெனெச்சியா” -நடுரோட்டில் ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு பெண்ணால் நேர்ந்த நிலை