செவிலியரை தாக்கிவிட்டு தப்பியோட்டிய கொரோனா நோயாளி!

 

செவிலியரை தாக்கிவிட்டு தப்பியோட்டிய கொரோனா நோயாளி!

தெற்கு மும்பையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில், செவிலியரை கத்தியால் தாக்கிய நோயாளி மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செவிலியரை தாக்கிவிட்டு தப்பியோட்டிய கொரோனா நோயாளி!

மலபார் ஹில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 45 வயதான ராஜேஷ் சிவசங்கர் குப்தாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கடந்த 13 ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனா அச்சத்தால் செவிலியரைவிட்டு தாக்கிவிட்டு அந்த மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது.

வீதியில் சுற்றித் திரிந்த அந்த நோயாளியை, சில மணிநேரங்களிலேயே காவல்துறையினர் கைது செய்து கொரோனா முகாமில் அனுமதித்தனர். அந்த கொரோனா நோயாளி மீது காவல்துறை 324 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைந்தவுடன் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.