‘அஜித் பெயரில் பல கோடி கடன்; கல்லூரி சீட் பேரம்’: திடீர் அறிக்கைக்கு காரணம் இதுதானாம்!

 

‘அஜித் பெயரில் பல கோடி கடன்; கல்லூரி சீட் பேரம்’: திடீர் அறிக்கைக்கு காரணம் இதுதானாம்!

நடிகர் அஜித் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு சில தனி நபர்கள் பொதுவெளியில் அஜித் பெயரிலும் , அவரின் பிரதிநிதி போலவோ பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருவதாக புகார் எழுந்த நிலையில் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்று அதிகாரப்பூர்வமாக அஜித் அறிவித்தார். அஜித்தின் இந்த திடீர் அறிக்கைக்கு காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

‘அஜித் பெயரில் பல கோடி கடன்; கல்லூரி சீட் பேரம்’: திடீர் அறிக்கைக்கு காரணம் இதுதானாம்!

இந்நிலையில் அஜித் சார்பில் வெளியான அறிக்கைக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அஜித்தின் பெயரை பயன்படுத்தி அவருக்கு நெருக்கமான திரையுலகை சேர்ந்த பிரமுகர் ஒருவர், பல்வேறு கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாக தெரிகிறது. மேலும் சில கல்லூரி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அஜீத் பெயரை பயன்படுத்தி சீட்டுக்கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளேன் என்று கூறி பைனான்சியர் சிலரை அணுகி கோடி கணக்கில் கடன்களையும் பெற்றுள்ளார்.

‘அஜித் பெயரில் பல கோடி கடன்; கல்லூரி சீட் பேரம்’: திடீர் அறிக்கைக்கு காரணம் இதுதானாம்!

இந்த செய்திகள் அஜித்தின் காதுக்கு செல்ல தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிக்கையை வெளியிட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் அஜித் நாகரிகம் கருதி சம்மந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.