அம்பானி வீட்டுக்கு புதிய உறுப்பினர் வருகை… தாத்தா, பாட்டியான முகேஷ் அம்பானி, நிடா அம்பானி

 

அம்பானி வீட்டுக்கு புதிய உறுப்பினர் வருகை… தாத்தா, பாட்டியான முகேஷ் அம்பானி, நிடா அம்பானி

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் மனைவி ஷ்லோக்காவுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தின் புதிய வரவால் முகேஷ் அம்பானி குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவின் மெகா கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி-நிடா அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவருக்கும், தொழிலதிபரான ரசல் மேத்தாவின் மகளான ஷ்லோக்கா மேத்தாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆகாஷ்-ஷ்லோக்கா திருமணத்தில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளையர், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை என பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி வீட்டுக்கு புதிய உறுப்பினர் வருகை… தாத்தா, பாட்டியான முகேஷ் அம்பானி, நிடா அம்பானி
நிடா அம்பானி-முகேஷ் அம்பானி

ஆகாஷ்-ஷ்லோக்கா தம்பதியனருக்கு நேற்று ஆரோக்கியமான மற்றும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. முகேஷ் அம்பானி மற்றும் நிடா அம்பானி ஆகியோர் தாத்தா, பாட்டியான சந்தோஷத்தில் உள்ளனர். குடும்பத்தின் புதிய வரவால் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

அம்பானி வீட்டுக்கு புதிய உறுப்பினர் வருகை… தாத்தா, பாட்டியான முகேஷ் அம்பானி, நிடா அம்பானி
ஷ்லோக்கா-ஆகாஷ் அம்பானி

இது தொடர்பாக அம்பானி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகவான் கிருஷ்ணரின் கிருபை மற்றும் ஆசிர்வாதங்களுடன் ஷ்லோக்கா மற்றும் ஆகாஷ் அம்பானி இன்று மும்பையில் ஒரு ஆண் குழந்தையின் பெற்றோர்கள் என்ற பெருமையை பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர் வருகை மேத்தா மற்றும் அம்பானி குடும்பங்களுக்கு மிகுந்த மிகழ்ச்சியை கொடுத்துள்ளது.