தோனியின் பெற்றோருக்கு கொரோனா – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

 

தோனியின் பெற்றோருக்கு கொரோனா – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. முதல் அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோரும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

தோனியின் பெற்றோருக்கு கொரோனா – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

அவர்களது குடும்பத்தாரும் பாதிப்புக்குள்ளாகுகின்றனர். இச்சூழலில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றொருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ராஞ்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோனியின் பெற்றோருக்கு கொரோனா – மருத்துவமனையில் திடீர் அனுமதி!

தோனி தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் பயோ பப்பிளில் இருக்கிறார். பெற்றோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அவர்களைப் பார்த்துக்கொள்ள தோனி தொடரைக் கைவிடுவாரா என்பது குறித்து தெரியவில்லை. தோனியிடமிருந்து இதுவரை எந்தத் தகவல் வெளிவரவில்லை.