எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
May 12, 2021, 19:12 IST1620826962000
தமிழகத்தில் உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி இருப்பதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “
உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன, அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 120 புதிய உழவர் சந்தைகள், 24 செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும்.புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை” என தெரிவித்தார்.