முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய முக்கிய கடிதம்!

 

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய முக்கிய கடிதம்!

கீழடி மற்றும் சிவகல பகுதியில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய முக்கிய கடிதம்!

அந்த கடிதத்தில், ஒன்றிய அரசின் தொல்லியல்துறை நாளந்தா, சாரநாத் லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய ஆய்வுகளை அனைவருக்கும் காட்சிப் படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்கள் ஆக அமைத்துள்ளது. அதே போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியை சங்ககால வாழ்விட பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய முக்கிய கடிதம்!

அகழாய்வுகள் காலத்தின் கண்ணாடி போன்றது. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்றுத் துறைக்கு செய்யும் நேர்மையான பங்களிப்பாகும். அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.