‘ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வு’ : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்!

 

‘ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வு’ : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்!

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்பட இருப்பதால், தேர்வுக்கான தேதியை மாற்றக்கோரி எம்.பி சு.வெங்கடேசன் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

‘ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வு’ : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்!

அந்த கடிதத்தில், இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலான் பண்டிகை மே 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று மத்திய அரசும், மாநில அரசும் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால், ரமலான் பண்டிகை பிறை தென்படுவதை பொறுத்து மாறுபடும் என்பதால் ஒரு நாள் முன்னதாகவோ அல்லது ஒரு நாள் பிறகோ கொண்டாடப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வரும் மே 13, 15ம் தேதி நடக்கவிருக்கும் தேர்வுகளை வேறு தேதிகளில் மாற்றி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வு’ : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்!

மேலும், மே 14 என அறிவிக்கப்பட்டிருக்கும் ரமலான் பண்டிகை வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் பண்டிகையின் போது மாணவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்துவது அழகல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 முதல் ஜூன் 11 வரையிலும் தேர்வு நடைபெறவிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வு’ : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்!