தாய் -தந்தை நினைவிடம் அருகே எம்.பி. வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம்!

 

தாய் -தந்தை நினைவிடம் அருகே எம்.பி. வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திநகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தாய் -தந்தை நினைவிடம் அருகே எம்.பி. வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம்!

பின்னர் அங்கிருந்து காமராஜர் அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உடல் பின் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திமுக எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தாய் -தந்தை நினைவிடம் அருகே எம்.பி. வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம்!

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் நல்லடக்கத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதில் சுமார் 100ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்தில் அவரின் தாய் -தந்தை நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.