“வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” – எம்.பி. மாணிக்கம் தாகூர்

 

“வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” –  எம்.பி. மாணிக்கம் தாகூர்

அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

“வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” –  எம்.பி. மாணிக்கம் தாகூர்

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை , “விநாயகர் சதுர்த்தி விழா விற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. அதனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்வைத்து தொண்டர்கள் வழிபடுவார்கள். தொடர்ந்து பேசிய அவர் , வருகிற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 100 தொகுதிகளில் வெற்றிபெறும் நிலை உருவாகிவிட்டது. அடுத்த ஆட்சியில் திமுகவா? பாஜகவா? என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். அதிமுகவுடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் கூட்டணி சென்றுகொண்டிருக்கிறது. வருகின்ற காலம் பாஜகவின் காலம் .இதுவே திமுகவின் கடைசி ஆட்சிக்காலம் .இனிமேல் தமிழ்நாட்டில் திராவிடத்திற்கு இடமில்லை; வேலையும் இல்லை” என்றார்.

“வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு பொழுதுபோக்கு அண்ணாமலை மட்டும்தான்” –  எம்.பி. மாணிக்கம் தாகூர்

இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும் என்று கணக்கு போடும் பாஜகதான் விரைவில் முடிவுக்கு வரும் எண்ணிக்கை 150 ஆக உயரும் என்று அண்ணாமலையும் கனவு கனவாகவே இருக்கும். வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு, கடந்த இரண்டு வருடமாக ஒரு பொழுது போக்கு அண்ணாமலை மட்டும்தான். அந்த அளவிற்கு நல்லா காமெடி செய்வார். அதனால் அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.