“ரஜினி கமலுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை” – கனிமொழி எம்.பி.

 

“ரஜினி கமலுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை” – கனிமொழி எம்.பி.

ரஜினி,கமலுக்கு வாக்களிக்கும் மக்கள் விரும்பவில்லை என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

“ரஜினி கமலுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை” – கனிமொழி எம்.பி.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகியுள்ள தமிழக கட்சிகள் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளன. திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இறங்கியுள்ள நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த சனிக்கிழமை நேரடியாக முதல்வர் பழனிசாமியே களமிறங்கினார். சேலம் எடப்பாடியில் பரப்புரையை தொடங்கிய அவர் மக்கள் மத்தியில் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து பேசினார். அதே சமயம் காணொலியில் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலின் அடுத்த மாதம் முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.

“ரஜினி கமலுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை” – கனிமொழி எம்.பி.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ரஜினி,கமலுக்கு வாக்களிக்கும் மக்கள் விரும்பவில்லை . ரஜினி கமலுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க மக்கள் விரும்பவில்லை. இனியும் ஏமாற தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர் என்றார்